கவிதை - 1
வந்தாரை விழுங்கி
பசியாற்றிக்கொண்டேன்
வாயிற்கதவாய்...
கவிதை - 2
வழித்துணையாக வந்தவளை
வாசலிலே உதறிவிட்டேன்
வருத்தத்தில் காலணி
கவிதை - 3
விரல்களின் வேகத்தால்
எழுந்தது இனிய இசை
கணினியின் 'கீபோர்ட்டில்'
கவிதை - 4
யாருக்கும் வளைந்து
கொடுக்காமலே உயர்ந்தவன் நான்
என்றது கம்பீரமான சுவர்
கவிதை - 5
துளியும் கசியாத இருளில்
கண்ணீருடன் மெழுகுவர்த்தி
கவிதை - 6
உனது மூட நம்பிக்கையினால்
உயிர் பிரிந்தேன்
எலுமிச்சையாய்
- ஐஸ்வர்யா ரவீந்திரன்
Comments
Post a Comment