அன்று,
சிக்கனமாக வாங்கிய சைக்கிள்
என்னை மட்டும் சுமக்கக்
கால் நெடுக உடன் வரும்
புன்னகை முகத்தார் - அப்பா
!
அண்டை வீட்டிலிருந்தாலும்
அயல்நாட்டிற்கே சென்றது போல்
பதைத்து வாடும் பேதை
பாசத்தால் ஆன நங்கை - அம்மா!
இன்று,
பலரின் கண்ணீரில் பெற்ற
சிலகோடி சன்மானத்தில்
சொகுசு கார் வாங்குபவன் -
என்
சிறு குழந்தை சிந்திய
முறுவலைக் கூட அள்ள
முற்பட முனையாதவன்...!
முடிவில்,
பணியாள் அள்ளிக்கொண்டாள்
அவனை, அக்கறையில்லாமல் - என்
துணைவியும் தள்ளி நின்றதனால்...!
கணங்கள் பல மாறியதால்
மனமும் மாறக் கூடுமோ?
- ஐஸ்வர்யா ரவீந்திரன்
Comments
Post a Comment