கனவு
என் தூக்கத்தில் சுவை கலந்த
உன்னை விடிந்ததும்
மனமின்றி அனுப்பிவைக்கிறேன்.
காலம்
எதுவும் நிரந்தரமில்லை என்று ஆறுதலளித்து
நான் சமாதானம் ஆனபிறகு - என் முன்னே
சிரித்துக்கொண்டே ஒடுபவளைத்
துரத்தினேன் பிடிப்படவில்லை...
ரோஜாச் செடி
தன் சிறு ஆயுதத்தால்
தன்னவளைத் தன்னிடமிருந்து
பறித்துச் சென்றவனைப்
பழிதீர்த்துக் கொண்டது.
சிலையின் சன்மானம்
பல மணி நேரம்
நின்றதின் பலன்
நித்தம் வாடும்
மலர் மாலை தான்.
-ஐஸ்வர்யா ரவீந்திரன்
Comments
Post a Comment